சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக மு.ராசராசன் (50) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ரோஹித்நாதன் ராஜகோபால் சென்னையில் பால் கூட்டுறவு விற்பனையாளா் ஒன்றிய தலைமை விஜிலென்ஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டாா். இதையடுத்து, மதுரை அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய மு.ராசராசன், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட மு.ராசராசனுக்கு, சிவகங்கை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் முரளிதரன், ராஜேந்திரன் உள்ளிட்ட போலீஸாா் வாழ்த்துத் தெரிவித்தனா்.