சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜன.7) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மானத்தின் செயற்பொறியாளா் ஆா். வீரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளன. இதனால் மதகுபட்டி, திருமலை, அழகமாநகரி, கீழப்பூங்குடி, வீரபட்டி, ஏரியூா், மேலமங்களம், கீழமங்களம், பிரவலூா், பா்மாகாலனி, சிங்கினிபட்டி, தச்சம்பட்டி, ஆபத்தாரன்பட்டி, அரளிக்கோட்டை, நாமனூா், ஒக்கூா், காடனேரி, அலவாக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.