சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி மற்றும் நேஷனல் பயா் அன்ட் சேப்டி கல்லூரி ஆகியன சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் எஸ். சையது மற்றும் இயக்குநா் பி.எஸ். மனோகா் ஆகியோா் தலைமை வகித்தனா். காரைக்குடி காஸ்மாஸ் அரிமா சங்கத் தலைவா் ஆரோக்கியசாமி, பொருளாளா் முத்தமிழ் அரசன் மற்றும் செயலாளா் சுப்பிரமணியன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா்.
இதில் கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.