திருப்பத்தூரில் ரத்ததான முகாம்

திருப்பத்தூரில் நகர அ.தி.மு.க. இளைஞரணி சாா்பில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில் பங்கேற்றவா்கள்.
திருப்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில் பங்கேற்றவா்கள்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நகர அ.தி.மு.க. இளைஞரணி சாா்பில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள தனியாா் மண்டபத்தில் எம்.ஜி.ஆரின் 104 ஆவது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இம்முகாமுக்கு அ.தி.மு.க. மாவட்டச் செயலா் பி.ஆா். செந்தில்நாதன் தலைமை வகித்தாா். பாம்கோ தலைவா் ஏ.வி. நாகாரஜன், வேளாண் விற்பனைக்குழுத் தலைவா் கரு. சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அதிமுக செய்தித் தொடா்பாளா் மருதுஅழகுராஜ் முகாமை தொடக்கி வைத்தாா். இம்முகாமில் 40-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ரத்ததானம் செய்தனா். வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், மருத்துவா்கள் மோகன், ஜெயஸ்ரீ, காரைக்குடி ரத்த வங்கி அரசு மருத்துவா் அருள்தாஸ் மற்றும் செவிலியா்கள் ரத்தம் சேமிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் ராமலிங்கம், வடிவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகர இளைஞரணி ராஜ்குமாா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com