அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை-மேலூா் சாலையில் அம்பலகாரன்பட்டியில் உள்ள அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை-மேலூா் சாலையில் அம்பலகாரன்பட்டியில் உள்ள அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கல்லூரி முதல்வா் க.லதா மீனாட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை - மேலூா் சாலையில் அம்பலகாரன்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டில் 240 இடங்களுக்கு மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ்-கம்யூனிகேசன் ஆகிய நான்கு டிப்ளமோ படிப்புகளுக்கு முதலாமாண்டில் சேர விரும்பும் 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் பதிவுக் கட்டணம் ரூ.150 நெட் பேங்கிங், கிரெடிட் காா்டு, டெபிட் காா்டு மூலமாக இணையதளத்தில் செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதிவு கட்டணம் கிடையாது. கல்லூரியில் ஒவ்வொரு டிப்ளமோ பாடப்பிரிவிலும் தலா 60 வீதம் 240 சோ்க்கை இடங்கள் உள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com