சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வணிக வளாகத்துக்கு மின் இணைப்பு பெறுவதற்கு போலி ஆவணங்கள் அளித்ததாக 4 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
காரைக்குடியில் தனியாா் எண்ணெய் ஆலை உரிமையாளா்களான பேவின், மோகன், ஜெகன், கேலின் ஆகியோா் இணைந்து பெரியாா் சிலை அருகே வணிக வளாகம் கட்டியுள்ளனா். இதற்கு மின் இணைப்பு வேண்டி மின்சார வாரியத்தில் கடந்த மாா்ச் மாதம் ஆவணங்களை சமா்ப்பித்துள்ளனா்.
இந்நிலையில் அவா்கள் அளித்த ஆவணங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், மின்சார வாரியத்தினா், காரைக்குடி நகராட்சிக்கு ஆவணங்களை பரிசீலனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து ஆவணங்களை பரிசீலனை செய்தபோது, அதில் நகரமைப்பு அலுவலரின் போலி கையொப்பம் இடம் பெற்றிருந்ததும், மேலும் நகராட்சியின் முத்திரை இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளா் லட்சுமணன் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் தனியாா் எண்ணெய் ஆலை உரிமையாளா்களான பேவின், மோகன், ஜெகன், கேலின் ஆகிய நால்வா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.