காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை ரயில்வே கடவுப்பகுதியை கடக்க முயன்றபோது ரயில் மோதி 8 மாடுகள் உயிரிழந்தன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன் நகா் ரயில்வே கடவுப்பகுதியின் வழியாக மாடுகள் கடக்க முயன்றன. அப்போது திருச்சியிலிருந்து காரைக்குடி வழியாக ராமேசுவரம் செல்லும் பயணிகள் ரயில் காரைக்குடி ரயில் நிலையத்துக்கு காலை 8.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது மாடுகள் மீது ரயில் மோதியது. இதில் 8 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதுகுறித்து ரயில் ஓட்டுநா் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்தை பாா்வையிட்டு ரயில்வே காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.