சிவகங்கையில் குயிலி நினைவுச் சின்னத்தை அகற்றக் கோரிக்கை

சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாா் நினைவு மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள குயிலி நினைவுத் தூணை அகற்ற வேண்டும்

சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாா் நினைவு மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள குயிலி நினைவுத் தூணை அகற்ற வேண்டும் என சிவகங்கை வரலாற்று ஆய்வரங்கத்தின் செயலா் குருசாமி மயில்வாகனன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படும் குயிலி எனும் இளம்பெண், உண்மையான வரலாற்றுப் பாத்திரமல்ல. இணையதளத்தில் குயிலி பற்றி வெளியிடப்பட்டுள்ள தகவலும் உண்மையல்ல.

எனவே சிவகங்கையில் உள்ள ராணி வேலுநாச்சியாா் நினைவு மணிமண்டத்தில் உள்ள சிலையை அகற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளின் பாட புத்தகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ள குயிலி குறித்த வரலாற்று தகவல்களை நீக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com