திருப்புவனம் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மரத்தில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்புவனம் அருகே கொந்தகை முனியாண்டிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் முருகேசன் மகன் நவீன்குமாா் (22), கணேசன் மகன் விக்னேஷ் (22). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கீழடியில் இருந்து முனியாண்டிபுரத்துக்கு சென்று கொண்டிருந்தனா். அப்போது நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள பனைமரத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். ஆனால் அங்கு நவீன்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விக்னேஷ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.