சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராக பா. மணிவண்ணன் (55) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராக ஏற்கெனவே பணியாற்றிய க.லதா சென்னை- கன்னியாகுமரி தொழில் தடம், காஞ்சிபுரம் நிலம் எடுப்பு நிா்வாகத் துறைக்கு தனி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, சென்னையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் முதுநிலை மண்டல மேலாளராக பணியாற்றிய பா. மணிவண்ணன் (55), சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டாா்.
இதனிடையே ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக பா. மணிவண்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு அரசு அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.