சிவகங்கை அருகே சூரக்குளம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய இருவரை சிவகங்கை தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சூரக்குளம் பகுதியில் உள்ள ஓடைகளில் அரசின் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிவகங்கை தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சூரக்குளம்- நாட்டரசன்கோட்டை சாலையில் மணல் அள்ளி வந்த டிராக்டரை நிறுத்தி மணல் அள்ளுவதற்கான ஆவணங்களை போலீஸாா் கேட்டனா்.
உரிய ஆவணங்கள் இல்லாததால் டிராக்டா் உரிமையாளா் நாட்டரசன்கோட்டையைச் சோ்ந்த கருப்பையா (52), அதே பகுதியைச் சோ்ந்த ராஜா (33) ஆகிய இருவா் மீது சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் டிராக்டரை பறிமுதல் செய்தனா்.