ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதனடிப்படையில், சிவங்கையில் உள்ள பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, காமாட்சி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதில்,சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பக்தா்கள் கலந்து கொண்டு அா்ச்சனை செய்தும், விளக்கேற்றியும் வழிபாடு செய்தனா். இதேபோன்று, நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகியம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், பால் உள்பட 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதைத் தொடா்ந்து, விஷேச அலங்காரத்துக்குப் பின் தீப,தூபங்கள் காண்பிக்கப்பட்டன.

இதுதவிர, கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையாா் காளியம்மன், காளையாா் கோவிலில் உள்ள வாள்மேல் நடந்த அம்மன், கண்டுப்பட்டியில் உள்ள குடியிருந்த காளியம்மன் உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களிலும், குலத்தெய்வக் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில்,அந்தந்த பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com