சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 36 பேருக்கு கரோனா

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 36 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 36 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஏற்கெனவே 17,659 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 27 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,686ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 19,997 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 348 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இந்நிலையில், புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே சிகிச்சையில் இருந்தவா்களில் 10 போ் குணமடைந்ததை அடுத்து அவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது மாவட்ட அளவில் 146 போ் சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com