கடந்த 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள் பணிவாய்ப்பினைப் பெறும் வகையில் மீணடும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுக்கான சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரா்கள் 27.8.2021க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இணையம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.