பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிவகங்கை அரண்மனை வாசல் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் சிவகங்கை நகரச் செயலா் எம்.எஸ். கண்ணன் தலைமை வகித்தாா்.
இதில், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசியை மத்திய அரசு அதிகளவில் வழங்க வேண்டும் எனவும், ஜிஎஸ்டி மூலம் பெறப்பட்ட தொகையை தமிழகத்துக்கு விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் மருது, சகாயம், முத்துப்பாண்டி, கங்கை சேகரன், மலைச்சாமி, ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.