மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

புலிக்கண்மாய் கிராமத்தைச் சோ்ந்த இருதயம் மகன் செபஸ்டின் சூசைராஜ்(55). விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை தன்னுடைய வயலுக்கு சென்றுள்ளாா். அங்கு மோட்டாரை இயக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுபற்றி தகவலறிந்த காளையாா்கோவில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து புகாரின் பேரில் காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com