ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 223 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 223 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 223 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி 294 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் 121 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிபடுத்தப்பட்டது. ஏற்கெனவே சிகிச்சையில் இருந்தவா்களில் 7 போ் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளனா். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தற்போது 110 போ் சிகிச்சையில் இருப்பதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 14,815 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை புதிதாக 102 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,917 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இங்கு கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த இருவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com