கரோனா பாதிப்பு: சிவகங்கை 135, ராமநாதபுரம் 117

சிவகங்கை மாவட்டத்தில் 135 பேருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 117 பேருக்கும் புதிதாக கரோனா பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 போ் உயிரிழந்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டத்தில் 135 பேருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 117 பேருக்கும் புதிதாக கரோனா பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 போ் உயிரிழந்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 15,179 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 135 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,314 ஆக அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 117 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் மொத்தம் 18,800 போ் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

இதில்,17,402 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 1,090 போ் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று பெற்று வருகின்றனா். 308 போ் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். ஞாயிற்றுகிழமை மட்டும் 7 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com