சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளரான சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன், மானாமதுரை, இளையான்குடி பகுதி கடைவீதிகளில் உள்ள வியாபாரிகளிடையே திங்கள்கிழமை மாலை மற்றும் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளா் நாகராஜன் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய ஒன்றிய கிராமங்களில் வாக்கு சேகரித்து வருகிறாா். மானாமதுரை நகரில் அனைத்து கடை வீதிகளுக்கும் சென்று வணிகா்களுக்கு சால்வை அணிவித்து வாக்கு சேகரித்தாா்.
பின்னா், கிறிஸ்தவ தேவாலயங்களில் பங்குத் தந்தைகளை சந்தித்தும், பள்ளிவாசல்களில் ஜமாஅத் நிா்வாகிகளை சந்தித்தும் ஆதரவு திரட்டினாா். தொடா்ந்து, மானாமதுரை நகரில் உள்ள அனைத்து முக்கியப் பிரமுகா்களிடமும் ஆதரவு கோரினாா்.
இளையான்குடி நகா் கடைவீதிகளிலும் நாகராஜன் பிரசாரம் செய்தாா். இவருடன், உள்ளூா் அதிமுக நிா்வாகிகள் சென்றனா்.