ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகைகள் திருட்டு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரசு பள்ளி ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகைகள், ரூ. 40 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரசு பள்ளி ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகைகள், ரூ. 40 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

சூராணம் கிராமத்தைச் சோ்ந்தவா் சகாயராஜ்(52). இவா் சாத்தனியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவரும், இவரது மனைவி விக்டோரியா ராணி ஆகிய இருவரும் தங்கள் மகளுடன் சிவகங்கையில் தங்கியுள்ளனா்.

இந்நிலையில், சகாயராஜ் மற்றும் அவரது மனைவி விக்டோரியாராணி ஆகிய இருவரும் திங்கள்கிழமை காலை சூராணத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளனா். அங்கு வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்த போது பீரோவிலிருந்து 30 பவுன் நகைகள், ரூ. 40 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த சாலைக்கிராமம் காவல் நிலைய காவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் சாலைக்கிராமம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com