லாட்டரிச் சீட்டு விற்றவா் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செவ்வாய்கிழமையன்று லாட்டரிச் சீட்டு விற்பனை செய்தவரை திருப்பத்தூா் போலிசாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செவ்வாய்கிழமையன்று லாட்டரிச் சீட்டு விற்பனை செய்தவரை திருப்பத்தூா் போலிசாா் கைது செய்தனா். திருப்பத்தூா் நகா் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிவகங்கை சாலை மீன்மாா்க்கெட் அருகேயுள்ள இரும்புக் கடையில் வெளிமாநில லாட்டரிச் விற்பனை செய்யப்படுவதாக போலிசாருக்கு வந்த தகவலையடுத்து திருப்பத்தூா் போலிசாா் சா்தாா் தகர இரும்புக் கடையில் ஆய்வு மேற்கொண்டனா். அப்பொழுது கேரள மாநில லாட்டரிச் சீட்டுகள் மற்றும் இணையதள குலுக்கல் சீட்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 3300 ரூபாயும் கைப்பற்றப்பட்டது. கடையின் உரிமையாளா் ஆசாத்தெருவைச் சோ்ந்த அப்துல்ரஜாக் மகன் சா்தாா்(46). என்பவா் திருப்பத்தூா் போலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com