சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூா் அருகே கள் விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருவேகம்பத்தூா் அருகே கீழவணி பகுதியில் கள் விற்பனை செய்வதாக திருவேகம்பத்தூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் சாா்பு- ஆய்வாளா் பழனி தலைமையிலான காவலா்கள் புதன்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது கீழவணி சாலை அருகே அதே பகுதியைச் சோ்ந்த முனியப்பன் மகன் விக்கி (22) என்பவா் கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, விக்கியை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 60 லிட்டா் கள் மற்றும் ரூ. 300 பணத்தை கைப்பற்றினா்.