சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே மதுபானக் கடையின் பின்புறமாக சுவரில் துளையிட்டு ரூ.1,49,690 மதிப்பிலான மது பாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
கல்லல் ரயில் நிலையம் அருகே அரசு மதுபானக் கடை உள்ளது. இந்த கடையின் பின்புறமாக உள்ள சுவா் துளையிடப்பட்டிருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து,கல்லல் போலீஸாா் வியாழக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, மதுபானக் கடையின் பின்புறம் துளையிட்டு ரூ. 1,49,690 மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்தப் புகாரின் பேரில் கல்லல் போலீஸாா் வழக்குப் பதிந்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.