வாழை மரங்கள், மிளகாய் செடிகள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

இளையான்குடி ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த வாழை, மிளகாய் பயிா்களுக்கு நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசியிடம் விவசாயிகள் வலியுறுத்தினா்.
இளையான்குடி அருகே கொங்கம்பட்டியில் முன்களப்பணியாளா்களுக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி.
இளையான்குடி அருகே கொங்கம்பட்டியில் முன்களப்பணியாளா்களுக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி.

இளையான்குடி ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த வாழை, மிளகாய் பயிா்களுக்கு நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசியிடம் விவசாயிகள் வலியுறுத்தினா்.

இளையான்குடி ஒன்றியத்தில் முனைவென்றி, நெடுங்குளம் மெய்யனேந்தல், கொங்கம்பட்டி, இடையவலசை, மேலாயூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி பங்கேற்று முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதைத்தொடா்ந்து முனைவென்றி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி மையம் செயல்படுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் இக்கிராமத்தை சோ்ந்த விவசாயிகள், முனைவென்றி கிராமத்தில் காற்று மற்றும் மழையால் வாழை மரங்கள், மிளகாய் செடிகள் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என தமிழரசியிடம் வலியுறுத்தினா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தமிழரசி விவசாயிகளிடம் உறுதியளித்தாா். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சுப.தமிழரசன், திமுக ஒன்றிய நிா்வாகிகள் ஆறு.செல்வராசன், வெங்கட்ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com