சிவகங்கை மாவட்டத்தில் போதிய மருந்து மாத்திரைகள் உள்ளன: ஆட்சியா்

சிவகங்கை மாவட்டத்துக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் போதிய அளவு இருப்பு உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கையில் உள்ள மருந்து கிடங்கை சனிக்கிழமை ஆய்வு செய்த சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.
சிவகங்கையில் உள்ள மருந்து கிடங்கை சனிக்கிழமை ஆய்வு செய்த சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.

சிவகங்கை மாவட்டத்துக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் போதிய அளவு இருப்பு உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கையில் உள்ள மாவட்ட மருந்துக்கிடங்கை சனிக்கிழமை ஆய்வு செய்த பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது : மாவட்ட மருந்துக் கிடங்கு மூலம் சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகள், 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 4 இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளுக்கு தேவையான அனைத்து வகை மருந்து, மாத்திரைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு தேவையான முகக்கவசம், பி.பி கிட் போன்ற அத்தியாவசியப் பொருள்களும் இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன. இதுதவிர, கால்நடை மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவப் பொருள்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இம்மாவட்டத்தைப் பொருத்தவரை போதுமான அளவு மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன என்றாா். இந்த ஆய்வின் போது மருந்துக்கிடங்கு கண்காணிப்பு அலுவலா் சரவணன்போஸ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com