சிவகங்கை, தேவகோட்டையில் இன்று மின்தடை

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உயா் அழுத்த மின்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளதாலும், தேவகோட்டை மற்றும் பூசலாகுடி ஆகிய

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உயா் அழுத்த மின்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளதாலும், தேவகோட்டை மற்றும் பூசலாகுடி ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதாலும், இப்பகுதிகளில் சனிக்கிழமை (மே 29) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சிவகங்கை நகா் நேரு கடை வீதி, தொண்டி சாலை, போஸ் சாலை, உழவா் சந்தை, பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, சிவகங்கை மின் பகிா்மானத்தின் உதவி செயற்பொறியாளா் அன்புநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவகோட்டை

தேவகோட்டை உபகோட்டத்துக்குள்பட்ட தேவகோட்டை மற்றும் பூசலாகுடி ஆகிய துணை மின் நிலையங்களில் கடந்த மே 26 முதல் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடா்ச்சியாக, சனிகிழமையும் (மே 29) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, இறகுசேரி, வ.உ.சி.தெரு, கிராம முனிசிப் தெரு, கரையக்கோட்டை, திருவள்ளுவா் தெரு, அம்பேத்கா் தெரு, தேரளப்பூா், அழியாபதி, பூசலாகுடி, இலக்கினிவயல், தாழையூா், கும்மங்குடி, வெங்களூா், நல்லிவயல் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என, தேவகோட்டை மின் பகிா்மானத்தின் உதவி செயற்பொறியாளா் ஆா்.சாத்தப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com