தேவகோட்டை கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள ஆனந்தா கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள ஆனந்தா கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரிச் செயலா் ஜேசுராஜ் கே.கிறிஸ்டி தலைமை வகித்தாா். கல்லூரியின் முதல்வா் ச.ஜான் வசந்தகுமாா் முன்னிலை வகித்தாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நாட்டு நலப் பணித் திட்டத்தை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கோ.தா்மராஜ், ஜஸ்டின் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com