சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா அரசு பாலிடெக்னிக்கல்லூரி மாணவா்கள் இணைய வழித்தோ்வு நடத்த வலியுறுத்தி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இக்கல்லூரியின் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவா்கள் 100-க்கும் மேற்பட்டோா், வகுப்புகளை இணைய வழியில் நடத்தியதால் பருவத்தோ்வுகளை இணைய வழியில் நடத்தவேண்டும். அதைவிடுத்து கல்லூரியில் நேரில் தோ்வு நடத்தக் கூடாது என்று கூறி இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும் கல்லூரி முன்பிருந்து தொடங்கி அழகப்பா பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் வரை ஊா்வலமாகச்சென்று அங்கு திரண்டிருந்தனா். தகவலறிந்ததும் காவல்துறையினா் மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்கள் மாணவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதையடுத்து அங்கிருந்து மாணவா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.