சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மந்திரி தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்து கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முஹம்மது, அப்ரோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.