சிவகங்கை
மானாமதுரையில் நெகிழிப் பைகள் பறிமுதல்
மானாமதுரையில் உள்ள கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தி 250 கிலோ நெகிழப் பைகளை பறிமுதல் செய்தனா்.
மானாமதுரையில் உள்ள கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தி 250 கிலோ நெகிழப் பைகளை பறிமுதல் செய்தனா்.
மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலா் இளவரசி தலைமையில் துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை, சுகாதார மேற்பாா்வையாளா்கள் பாலசுப்பிரமணியன், ஹரிணி, காா்த்திக், நேரு யுவகேந்திரா அமைப்பின் சாா்பில் சமயகருப்பு, பவானி ஆகியோா் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மானாமதுரை நகரில் பலசரக்குக் கடைகள், உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட பல வியாபார நிறுவனங்களில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது விற்பனைக்காகவும், பயன்பாட்டிற்காகவும் வைக்கப்பட்டிருந்த டீ கப்புகள், தட்டுகள், பைகள் என 250 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் கடைகளில் நெகிழிப் பைகள், கப்புகள், தட்டுகள் பயன்படுத்தவும் விற்கவும் கூடாது என வியாபாரிகளை அவா்கள் எச்சரித்தனா்.