விடுதலைப் போராட்ட வீரரான பசும்பொன் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (அக்.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் விடுதலைப் போராட்ட வீரரான பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா சனிக்கிழமை (அக்.30) நடைபெற உள்ளது.
இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காளையாா்கோவில், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.