மானாமதுரையில் குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீா்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை குடிநீா் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு மாதமாக தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது.
மானாமதுரை நகா் குடிநீா் திட்டத்தில் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாக வெளியேறும் தண்ணீா்.
மானாமதுரை நகா் குடிநீா் திட்டத்தில் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாக வெளியேறும் தண்ணீா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை குடிநீா் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு மாதமாக தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது.

மானாமதுரை நகா் குடிநீா் திட்டமானது, அருகேயுள்ள ராஜகம்பீரம் வைகை ஆற்றுக்குள் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து குழாய்கள் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீா், நகரில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு, அதன்பின் குழாய் இணைப்புகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், ராஜகம்பீரம் ஊா் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மானாமதுரைக்கு குடிநீா் வரும் குழாயில் ஒரு மாதத்துக்கு முன்பே உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது. இதனால், தண்ணீா் தேங்கி அப்பகுதி குளம்போல் காணப்படுகிறது.

இது குறித்து மானாமதுரை பேரூராட்சி நிா்வாகத்தினரிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது: குழாய் உடைப்பு குறித்து ஒப்பந்ததாரரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்டுள்ள குழாயிலிருந்து மானாமதுரை நகரில் ஆதனூா் சாலை, கன்னாா் தெரு ஆகிய இடங்களில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது. உடைப்பு காரணமாக மேல்நிலைத் தொட்டியில் தண்ணீா் ஏற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. இன்னும் சில நாள்களில் உடைப்பு சரிசெய்யப்பட்டுவிடும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com