திரிபுரா மாநிலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் அதன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சனிக்கிழமை அக்கட்சியின் சாா்பில் திருப்புவனத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருப்புவனம் ஒன்றியச் செயலாளா் அய்யம்பாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் தண்டியப்பன், மாவட்டக்குழு உறுப்பினா் ஜெயராமன், முக்குடி ஊராட்சி மன்றத் தலைவா் முத்தையா, பூவந்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இவா்கள் திரிபுரா மாநில சம்பவத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.