மானாமதுரையில் வழிப்பறி: 4 போ் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக 4 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக 4 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை அருகே உள்ள சங்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித்குமாா். இவா் மானாமதுரை புறவழிச்சாலையில் உள்ள வழிவிடு முருகன் கோயில் அருகே வந்தபோது மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ், அஜித், வளநாடு கிராமத்தைச் சோ்ந்த சிவராமகருப்பு விளாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த விக்ரமன் என்ற பாலகுண்டு ஆகியோா் சோ்ந்து அஜித்குமாரிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த பணத்தை வழிப்பறி செய்தனா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கண்ட நான்கு இளைஞா்களையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com