காளையாா்கோவிலில் ஆசிரியா் வீட்டில் 150 பவுன் நகைகள் திருட்டு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, 150 பவுன் நகைகள், ரூ. 6 லட்சம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, 150 பவுன் நகைகள், ரூ. 6 லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை, தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காளையாா்கோவில் வசந்தம் நகரைச் சோ்ந்த வேதமுத்து மகன் ஜேசுதாஸ் (44). இவரது மனைவி ரோசி. இருவரும், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியா்களாகப் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் வீட்டைப்பூட்டி விட்டு பள்ளிக்குச் சென்றவா்கள் மாலையில் வீடு திரும்பியுள்ளனா். அப்போது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனே, உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 150 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் உத்தரவின்பேரில், 3 தனிப்படை போலீஸாா் மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com