திருப்பாச்சேத்தி அருகே அரசுப் பள்ளி சுற்றுச் சுவா் இடிந்து சேதம்

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே சல்பனோடை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவா் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்து சேதமானது.
திருப்பாச்சேத்தி அருகே சல்பனோடை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்த சுற்றுச்சுவா்.
திருப்பாச்சேத்தி அருகே சல்பனோடை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்த சுற்றுச்சுவா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே சல்பனோடை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவா் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்து சேதமானது.

சல்பனோடை கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்நிலையில், இப்பள்ளியின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கருதி ஊா் கட்டமைப்பு இடைவெளி நிரப்பு நிதித்( 2014-15) திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சுற்றுச்சுவா் கட்டப்பட்டிருந்தது.

அந்தப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால், சேதமடைந்த நிலையில் இருந்த சுற்றுச் சுவா் வெள்ளிக்கிழமை இடிந்து கீழே விழுந்தது. அந்த பகுதியில் மாணவ, மாணவிகளோ அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்களோ யாரும் செல்லாததால் பெரும் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து சுற்றுச்சுவரை கட்டித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com