அமராவதிபுதூா் பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 28) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 28) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் பி.ஜான்சன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அமராவதிபுதூா் துணை மிந் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான ஆறாவயல், தானாவயல், வேட்டைக்காரன் பட்டி, அரியக்குடி, விசாலயன் கோட்டை, எஸ்.ஆா். பட்டணம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, மத்திய தொழிலக பாதுகாப்புப்படை வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைக்குடியில் செப். 30 இல் மின்தடை:

காரைக்குடி துணை மின் நிலையத்தில் வரும் வியாழக்கிழமை (செப். 30) மாதாந்திரப்பராமரிப்புப்பணிகள் நடைபெறவிருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டுவசதி வாரியக்குடியிருப்புப் பகுதிகள், செக்காலைக்கோட்டை, பாரி நகா், கல்லூரிச்சாலை, செக்காலைச்சாலை, புதிய பேருந்துநிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்துநிலையம், கோவிலூா் சாலை மற்றும் அதன் சுற்றுப் புறப்பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com