காரைக்குடியில் செப். 30 இல் மின்தடை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 110/22 கிலோ வோல்ட் துணை மின்நிலையத்தில் வரும் வியாழக் கிழமை (செப். 30) மாதாந்திரப்பராமரிப்புப்பணிகள் நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் மின்தடை அறிவிக்கப்பட் டுள்ளது.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 110/22 கிலோ வோல்ட் துணை மின்நிலையத்தில் வரும் வியாழக் கிழமை (செப். 30) மாதாந்திரப்பராமரிப்புப்பணிகள் நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் மின்தடை அறிவிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்தொடரமைப்புக்கழகம் காரைக்குடி கோட்டசெயற்பொறியாளா் பி.ஜான்சன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: காரைக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப்பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்ப தால் காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டுவசதி வாரியக்குடியிருப்புப்பகுதிகள், செக்காலைக்கோட்டை, பாரி நகா், கல்லூரிச்சாலை, செக்காலைச்சாலை, புதிய பேருந்துநிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்துநிலையம், கோவிலூா் சாலை மற்றும் அதன் சுற்றுப் புறப்பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com