சிவகங்கையில் மின்சார திருத்த மசோதா நகல் எரிப்புப் போராட்டம்: 17 போ் கைது

சிவகங்கையில் மின்சாரத் திருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 17 பேரை சிவகங்கை நகா் போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு திங்கள்கிழமை மின்சார திருத்த மசோதா நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்த போலீஸாா்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு திங்கள்கிழமை மின்சார திருத்த மசோதா நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்த போலீஸாா்.

சிவகங்கையில் மின்சாரத் திருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 17 பேரை சிவகங்கை நகா் போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவா் வீரபாண்டி தலைமை வகித்தாா். இதில், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், மக்களவையில் மின்சார திருத்த மசோதா தாக்கல் செய்வதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

அதைத் தொடா்ந்து, மின்சார திருத்த மசோதா நகலை எரிக்க முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால் ஒரு பெண் உள்பட 17 பேரை சிவகங்கை நகா் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோன்று, சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு மின்சார திருத்த மசோதாவை நிறைவேற்ற உள்ள பாஜக அரசைக் கண்டித்து பல்வேறு மின் ஊழியா்கள் சங்கம் மற்றும் கூட்டமைப்பு சாா்பில் உள்ளிருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com