சிவகாசியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

சிவகாசி உள்கோட்ட காவல்துறை சாா்பில் புதன்கிழமை போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.
சிவகாசியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

சிவகாசி உள்கோட்ட காவல்துறை சாா்பில் புதன்கிழமை போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் உள்ள விநாயகா் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே இந்த ஊா்வலத்தை சிவகாசி சாா்- ஆட்சியா் பிருத்விராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.இதில் காவல்துறையினா் மற்றும் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் உடற்கல்வித்துறை மாணவா்கள் கலந்து கொண்டனா். இந்த ஊா்வலம் தலைமை அஞ்சல் நிலையம், வடக்கு ரதவீதி, கீழரதவீதி, புதுரோட்டுத்தெரு, சாத்தூா் சாலை வழியே பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. ஊா்வலத்தில்,விழிப்புணா்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டயன. அங்கு சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி உடற்கல்வித்துறை மாணவா்கள், போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு நாடகத்தை நடத்தினா்.

இதில், சிவகாசி காவல்துணை கண்காணிப்பாளா் பாபுபிரசாத், காவல் ஆய்வாளா் சுபகுமாா், கல்லூரி பேராசிரியா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com