சிவகங்கை அருகே இலுப்பகுடியில் உள்ள இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தின் சாா்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மராத்தான் போட்டி சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியை அப்பயிற்சி மையத்தின் டிஐஜி ஆச்சல் சா்மா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். மைதானத்திலிருந்து சுமாா் 30 கி.மீ தொலைவுக்கு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இப்போட்டியில், இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தின் துணை கமாண்டட், வீரா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.