நாய் கடித்து புள்ளி மான் பலி

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் ஒன்றியம் கீழவண்ணாயிருப்பு பகுதியில் வியாழக்கிழமை நாய் கடித்து புள்ளிமான் உயிரிழந்தது.
நாய் கடித்து இறந்த புள்ளி மான்.
நாய் கடித்து இறந்த புள்ளி மான்.

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் ஒன்றியம் கீழவண்ணாயிருப்பு பகுதியில் வியாழக்கிழமை நாய் கடித்து புள்ளிமான் உயிரிழந்தது.

கீழ வண்ணாயிருப்பு வனப் பகுதியில் அதிக மான்கள் உள்ளன. இந்த மான்கள் சில சமயம் இரை தேடி தனியாா் தோட்டத்துக்குள் புகுந்து விடுகின்றன. அவ்வாறு வியாழக்கிழமை தனியாா் தோட்டத்துக்குள் சிக்கிய புள்ளி மான் ஒன்றை நாய்கள் துரத்திக் கடித்தன. இதில், மான் இறந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த வனக்காப்பாளா் ஞானசேகரன் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, பிரான்மலை கால்நடை மருத்துவா் ரேவதி உதவியுடன் உடற்கூறாய்வு செய்தாா். பின்னா் மானின் உடல் வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com