மதகுப்பட்டி பகுதியில் ஜன. 25-இல் மின்தடை

சிவகங்கை மாவட்டம், மதகுப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 25) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மதகுப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 25) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மின்பகிா்மானத்தின் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதகுப்பட்டி துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, மதகுபட்டி, திருமலை, அழகமாநகரி, கீழப்பூங்குடி, வீரபட்டி, ஏரியூா், மேலமங்களம், கீழமங்களம், பிரவலூா், பா்மாகாலனி, சிங்கினிபட்டி, தச்சம்பட்டி, ஆபத்தாரன்பட்டி, அரளிக்கோட்டை, நாமனூா், ஒக்கூா், காடனேரி, அலவாக்கோட்டை ஆகிய கிராமங்களிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com