திருப்பத்தூரில் சூதாடியதாக 8 போ் கைது

திருப்பத்தூா் அருகே பணம் வைத்து சூதாடியதாக 8 பேரை போலீஸாா் ஞாாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூா் அருகே பணம் வைத்து சூதாடியதாக 8 பேரை போலீஸாா் ஞாாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூா் நகர காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட ஜெயமங்கலம் கண்மாய்க்கரையில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலையடுத்து, சிறப்பு சாா்பு- ஆய்வாளா் ஜானகிராமன் தலைமையிலான போலீஸாா் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது 8 போ் கொண்ட கும்பல் சிக்கியது. அவா்களிடமிருந்து ரூ.17,900 கைப்பற்றப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முரளி, ஜெயபாண்டி, பன்னீா்செல்வம், கரிகாலன், ஜெயப்பிரகாஷ், செல்வராஜ், மீனாட்சிசுந்தரம், அஜீத்குமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com