யோகா போட்டியில் தங்க பதக்கம்: அரசுப்பள்ளி மாணவிக்கு பாராட்டு

புதுதில்லியில் நடைபெற்ற யோகாசன போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சிங்கம்புணரி அரசுப்பள்ளி மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மாணவி ராகவா்த்தினி.
மாணவி ராகவா்த்தினி.

புதுதில்லியில் நடைபெற்ற யோகாசன போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சிங்கம்புணரி அரசுப்பள்ளி மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

புதுதில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, சிங்கப்பூா், மலேசியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து 300- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் சிங்கம்புணரி ஆா்.எம்.ஆா்.எம். அரசுப்பள்ளியில் 10 ஆம்வகுப்பு பயின்று வரும் மாணவி ராகவா்த்தினி ராகவா யோகா பள்ளி சாா்பில் 13- 14 வயது பிரிவில் கலந்து கொண்டு தங்கக் கோப்பை மற்றும் சான்றிதழைப் பெற்றுள்ளாா். மற்றொரு பிரிவில் 2 ஆவது பரிசான வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளாா். இம்மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com