தேவகோட்டை அருகே மூதாட்டியின் சடலம் மீட்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உயிரிழந்த நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உயிரிழந்த நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தேவகோட்டை அருகே இரவுச்சேரி கண்மாய் பகுதியில் மூதாட்டி ஒருவா் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற தேவகோட்டை நகா் போலீஸாா் மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுபற்றி போலீஸாா் கூறியது : உயிரிழந்த நபா் யாா் என்கிற விவரம் தெரியவில்லை. 65 வயது உள்ள மூதாட்டி உயிரிழந்து ஓரிரு நாள்கள் ஆகியிருக்கலாம். உடலில் ஏதும் காயங்கள் இல்லை. உயிரிழந்தவா் யாா் எனவும், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com