சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கால்நடைத் துறை சாா்பில், பயனாளிகளுக்கு கால்நடை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி பங்கேற்று, 100 பயனாளிகளுக்கு ரூ.17.5 லட்சம் மதிப்பிலான ஆடுகளை வழங்கிப் பேசினாா்.
இதில், ஒன்றியத் தலைவா் சின்னையா, கால்நடைத் துறை உதவி இயக்குநா் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயராஜ், கால்நடை ஆய்வாளா் பால்கண்ணன், கால்நடை மருத்துவா்கள் சித்தாா்த்தன், முகுந்தன் பவித்ரன், முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.