சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களில் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து மானாமதுரை ஒன்றியம் முத்தனேந்தலில் இத்திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி தலைமை வகித்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
விழாவில் வேளாண்மை துறை அதிகாரிகள், திமுக ஒன்றியச் செயலாளா் துரை.ராஜாமணி, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் முத்துச்சாமி, முத்தனேந்தல் ஊராட்சி மன்றத் தலைவா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருப்புவனம் ஒன்றியத்தில் ஏனாதி, தேளி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற விழாவில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் சின்னையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன் பங்கேற்று விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.