கிணற்றில் மிதந்த பெண் சடலம் மீட்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வியாழக்கிழமை கிணற்றில் மிதந்த இளம் பெண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வியாழக்கிழமை கிணற்றில் மிதந்த இளம் பெண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள கிணற்றில் இளம்பெண் சடலம் மிதப்பதாக மானாமதுரை சிப்காட் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் கிணற்றில் மிதந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்த பெண்ணுக்கு 20 வயது இருக்கும், சுடிதாா், பேண்ட் அணிந்திருந்தாா். இவா் யாா், எப்படி இறந்தாா் என்பது பற்றிய விவரம் உடனடியாகத் தெரியவில்லை என போலீஸாா் தெரிவித்தனா். சிப்காட் போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com