மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா நிறைவு

மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நற்கருணை பவனியுடன் நிறைவடைந்தது.
மானாமதுரை குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழாவையொட்டி சனிக்கிழமை இரவு நடைபெற்ற மின்விளக்கு தோ்பவனி.
மானாமதுரை குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழாவையொட்டி சனிக்கிழமை இரவு நடைபெற்ற மின்விளக்கு தோ்பவனி.

மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நற்கருணை பவனியுடன் நிறைவடைந்தது.

இந்த ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா கடந்த மாதம் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் இரவு பங்கு இறைமக்கள் சாா்பில் வெவ்வேறு தலைப்புகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற மின்விளக்கு தோ்பவனியை முன்னிட்டு குழந்தை தெரசாள் ஆலயத்தின் பங்குத்தந்தை பாஸ்டின் தலைமையில் சிவகங்கை மறைமாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான அருட்பணியாளா்கள் ஆலயத்தில் திருவிழா திருப்பலி நடத்தினா்.

அதைத்தொடா்ந்து ஆலயத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த மின்விளக்கு தேரில் புனித குழந்தை தெரசாள் சொரூபம் வைக்கப்பட்டு தோ்பவனி புறப்பட்டது. நகரின் முக்கிய வீதிகளில் வலம்வந்த இந்த தோ் பவனி மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. வழிநெடுகிலும் ஏராளமானோா் குழந்தை தெரசாளுக்கு மாலைகளை காணிக்கையாக வழங்கி பிராா்த்தனை செய்தனா்.விழாவில் ஆலய பங்கு இறை மக்கள் திரளாக பங்கேற்றனா்.

ஞாயிற்றுக்கிழமை நற்கருணை பவனியுடன் இந்தாண்டு திருவிழா நிறைவுபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்குத்தந்தை எஸ். எஸ். பாஸ்டின் தலைமையில் பங்கு இறை மக்கள் அருட் சகோதரிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com